Monday, December 22, 2003

மாயை

--------------------------------------

பட்டாம்பூச்சியாய் பறந்தே திரிந்தேன்
தூரத்தினிலே தொடு வானம் கண்டேன்
மலர்களினூடே மனதை இழந்தேன்
உள்ளில் தேனை உறிஞ்சி சுவைத்தேன்
உன் காலடி ஓசையில் கண் மெல்ல திறந்திட
கனவெது நினைவெது கலங்கி நின்றேன்
காற்றினூடே பறந்தது நானா - இல்லை
மனிதன் கனவில் பூச்சியாய் திரிந்தேனா
உலகத்தோடு உள்ளமும் சுற்றிட
உண்மை அறிந்திட விழைந்து நின்றேன்
வாழ்க்கை என்பது வெறும் கனவுகள் தானா
உண்மை சொல்லுவாய் உற்ற என் தோழ

No comments: