Monday, February 23, 2004

ethir paarppu

எதிர் பார்ப்பு
**************
என்னெதிர் வந்து
முட்டச்சிறகில் எனை மூடி
மல்லிகை கொண்டு
மஞ்சம் அமைத்து
கண்ணே மணியே
கொஞ்சுதல் வேண்டாம்

பசியறிந்து சோறூட்டி
தேவையறிந்து தாலாட்டி
மடிமீதெனை கிடத்தி
தாயாய் மாறவேண்டாம்

இங்கெனக்கு அறிவு தந்து
எத்தனையோ இடர்களிடை
காத்து வளர்த்த தந்தையாய்
வரவும் வேண்டாம்

எந்தன் கால்கள் ஒய்ந்திடும் நேரம்
எந்தன் கைகள் களைத்திடும் நேரம்
கண்களின் பார்வை மங்கிடும் நேரம்
என்னை எடுத்து மண்ணில் சேர்க்கும்
எட்டுக் கரங்களில் ஒன்றாய்
வா இறைவா

No comments: